ஜனாதிபதி செயலகத்திற்கு முன் பதற்ற நிலை! இராணுவம் நள்ளிரவில் குவிப்பு

0
384

நள்ளிரவில் கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்குள் பாதுகாப்பு பிரிவினர் நுழைந்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினர் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்குள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவே இவ்வாறு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அந்த பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்களும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.