தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியால் பலர் சைக்கிள்களை பயன்படுத்தப் பழகிவிட்டனர்.
கொழும்பில் பலர் துவிச்சக்கர வண்டியில் பயணிப்பதைக் காண முடிகிறது.
கொழும்பிலுள்ள சில பல்பொருள் அங்காடிகளுக்கு அருகில் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
கொழும்பு கொம்பனி வீதியில் அமைந்துள்ள ‘கொழும்பு சிட்டி சென்டருக்கு’ முன்பாக சைக்கிள் தரிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.