சூடுபிடிக்கும் இலங்கை அரசியல்; அனுர எடுத்த நடவடிக்கை!

0
759

நாட்டின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க போட்டியிடவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்காக வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஜே.வி.பியின் எம்.பியான விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.

அதேவேளை பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் போட்டியிடவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையிலேயே அனுரகுமாரவின் அறிவிப்பும் வெளியாகியுள்ள நிலையில் நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.