இலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் சேவையாற்றுவேன்!

0
736

இலங்கை ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் தொடர்ந்தும் தான் மக்களுக்காக சேவை யாற்றுவேன் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வாசிக்கப்பட்ட அவரது இராஜினாமா கடிதத்திலேயே இதனைத் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்ட கடும்பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர்போராடங்களை முன்னெடுத்திருந்த நிலையில் முன்னாள் ஜானதிபதி கோட்டாபய நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதுடன், தனது பதவியையும் இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.