ட்விட்டரை கைவிட்ட எலோன் மஸ்க்!

0
472

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) சமூகவலைதளமான டுவிட்டரை வாங்க முடிவு செய்த நிலையில் தற்போது அதனை கைவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்ட டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் (Elon Musk) கைவிட்ட சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

44 பில்லியன் டாலர்களுக்கு டுவிட்டரை எலான் மஸ்கிடம் (Elon Musk) விற்க டுவிட்டர் நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு டுவிட்டர் நிறுவன பங்குகளை எலான் மஸ்கிற்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வந்தது.

இதற்கிடையே, டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகள் உள்பட சில விவரங்களை தரும்படி டுவிட்டர் நிர்வாக குழுவிடம் எலான் மஸ்க் (Elon Musk) கோரிக்கை விடுத்தார்.

எனினும், இரண்டு மாதங்களாகியும் எலான் மஸ்க் (Elon Musk) கேட்ட விவரங்களை தர டுவிட்டர் நிறுவனம் மறுத்து வந்தது. இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் (Elon Musk) இன்று அதிரடியாக அறிவித்தார்.

டிவிட்டரை கைவிட்ட எலான் மாஸ்க்! அதிரடி அறிவிப்பு | Elon Musk Abandoned Twitter

போலி கணக்குகள் கேட்ட தகவல்களை டுவிட்டர் நிறுவனம் தரதாலும் ஒப்பந்தப்படி செயல்படாததாலும் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் (Elon Musk) அறிவித்துள்ளார்.

அதேவேளை டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் (Elon Musk) கைவிட்ட நிலையில் அவர் மீது வழக்குத்தொடர உள்ளதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.