கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்களின் தாகம் தீர்த்தவர்

0
463

கிளிநொச்சி நகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருக்கும் மக்களிற்கு தனிநபர் ஒருவர் குடிநீர் வழங்கி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொழுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருப்போரின் தாகம் தீர்க்க அவர் எடுத்த பணியை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

அதேவேளை எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு அவர்களின் தாகம் தணிக்க தண்ணீர் கொடுத்து உதவுமாறு யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.