உடனே அனுப்புங்கள்; ஓமானிடம் கெஞ்சும் இலங்கை!

0
670

நாட்டில் எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில் எதிர்வரும் நாட்களில் உடனடியாக இரண்டு எரிவாயு கப்பல்களை நாட்டிற்கு அனுப்புமாறு ஓமான் எரிவாயு நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை ஓமானிலிருந்து இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

உடனடியாக அனுப்புங்கள்; நாடொன்றிடம் கெஞ்சும் இலங்கை!

அதற்காக குறித்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல்கள் அண்மையில் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த ஒப்பந்த நடவடிக்கைக்கு மேலதிகமாக எதிர்வரும் நாட்களில் உடனடியாக இரண்டு எரிவாயு கப்பல்களை நாட்டிற்கு அனுப்புமாறு அந்நிறுவனத்திடம் கோரியுள்ளதாகவும் லிட்ரோ நிறுவன தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உடனடியாக அனுப்புங்கள்; நாடொன்றிடம் கெஞ்சும் இலங்கை!