யாழில் திருமணத்திற்கு வந்த தம்பதியரிடம் நகைகள் கொள்ளை!

0
511

யாழில் திருமண நிகழ்வுக்கு வருகை தந்த தம்பதியிடம் 15 பவுண் நகைகள் கொள்லையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியிடம் தங்க நகைகளை அபகரிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் இருவர் கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் நாவற்குழியைச் சேர்ந்த 19 மற்றும் 22 வயதுடைய இருவரே இன்று கைது செய்யப்பட்டனர்.

குறித்த தம்பதியர் வவுனியாவிலிருந்து வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற திருமண நிகழ்வுக்கு வருகை தந்து திரும்பிய போது கடந்த 9 ஆம் திகதி கல்வியங்காடு – செம்மணி, ஆடியபாதம் வீதியில் வைத்து 15 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.