கிண்ணியாவில் மீனவர்களால் பிடிபட்ட 5000 கிலோ சுறா!

0
713

திருகோணமலை – கிண்ணியாவில் மீனவர்களின் வலையில் பாரிய மீன் ஒன்று சிக்கியுள்ளது. சுறா வகையை சார்ந்த குறித்த மீன் நேற்று கிண்ணியா கடற்பரப்பில் சிக்கியுள்ளது.

5000 கிலோ கிராம் எடையை மதிக்கத்தக்க சுறா வகை மீன் (Whale Shark) ஒன்று சிக்கியுள்ளது.

இதனை மீனவர்கள் கரைக்கு பெரும் சிரமத்திற்கு மத்தியில் கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.

மீனவர்களின் வலையில் சிக்கிய பாரிய மீனால் கிண்னியா மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.