“நாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை”

0
566

நாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை எனவும் போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த உறவுகளுக்கு முழு உரிமை உண்டு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர்களின் இந்த உரிமையை யாரும் தடுக்கவே முடியாது எனவும் அவர் கூறினார். அத்துடன், நினைவேந்தல் நிகழ்வுகளில் இறந்தவர்களின் ஆத்மாவை வைத்து எவரும் அரசியல் செய்யக் கூடாது எனவும் பிரதமர் ரணில் வலியுறுத்தியுள்ளார்.

இறுதி கட்டப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தற்போது வடக்கு கிழக்கு உட்பட பல பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

 அதேவேளை 2022 மே மாதம் 18 ஆம் திகதி இலங்கையில் தாக்குதல் ஒன்றை நடத்த விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள் காட்டி, கடந்த மே 13 ஆம் திகதி இந்தியாவில் வெளியாகும் ‘தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.