யாழ்.மாநகர சபைக்கு ஆளுநர் விடுத்த எச்சரிக்கை!

0
684

யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் வெசாக் கூடு கட்டுவதற்கு இராணுவத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கையை யாழ் மாநகர சபை நிராகரித்துள்ளது.

இதனையடுத்து, “வெசாக் கூடு ஆரியகுளம் பகுதியில் கட்டுவதற்கு அனுமதி வழங்காவிட்டால் யாழ் மாநகர சபையை கலைக்க நேரிடும்” என வடக்கு மாகாண ஆளுநர் எச்சரித்துள்ளதாகவும், உடனடியாக அனுமதி கொடுக்குமாறு கட்டளையிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  நேற்றைய தினம் அவசர அவசரமாக மாநகர சபை உறுப்பினர்கள் இணைய வழியில் கூடி, சபை கலைக்கப்படுவது பற்றி பிரச்சினை இல்லை என்றும், சபை தீர்மானத்தை மீற முடியாது என்றும், முறைப்படி எழுத்து மூல கோரிக்கையை தந்தால் வேறு ஏதாவது வழி இருக்கா என்று பரிசீலனை செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து மாநகர சபை அனுமதி வழங்கவில்லை என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.