அமைச்சர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

0
665

பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்படி, நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் பக்கத்திலுள்ள முன்வரிசை ஆசனம் (ஏழாவது ஆசனம்) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருபுறமும் முன் வரிசையில் ஆசனம் வழங்கப்படவுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் பிரதமராக இருந்த அவருக்கு முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரணியின் முன் ஆசனம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது.