மேலே ரணில் கீழே பசில் நெருக்கடி மேலும் மோசமாகும்!

0
610

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பது தற்போதைய நெருக்கடியை மேலும் மோசமாக்கும் என்று மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். விரைவில் புதிய பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெற முடியும் என்று ரணில் விக்கிரமசிங்க கருதுகிறாரா? இதன் உண்மை நிலையை பார்த்தால், மேலே ரணில் கீழே பசில்´´. எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.