ராஜபக்சவினர் இருக்கும் அரசாங்கம் ஒன்றில் எவ்வித பதவிகளையும் ஏற்க போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொய்ப் பிரசாரங்கள் மூலம் மக்களை தவறாக வழி நடத்தும் முயற்சிகளை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் அரசாங்கம் ஒன்றில் எவ்வித பதவிகளையும் பெற்றுக்கொள்வதில்லை எனவும் அதனை முற்றாக நிராகரிப்பதாகவும் பொன்சேகா கூறியுள்ளார்.