இலங்கை பிரச்சனையால் சிக்கலில் சிக்கிய லொஸ்லியா

0
821

இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா அங்குள்ள சக்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வந்தார்.

தமிழகத்தில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் அவர் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து நடிகர்கள் லாஸ்லியாவுக்கு படையெடுக்கத் தொடங்கினர்.

ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் லொஸ்லியா. ஒரு சமீபத்திய நேர்காணலில், இலங்கையின் பொருளாதார பிரச்சினைகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு லொஸ்லியா பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“இலங்கையில் இப்பொழுது இருக்கும் பொருளாதார பிரச்சனை குறித்து போஸ்ட் தான் போட்டு ஷேர் செய்து என்னால் வருத்தப்படத்தான் முடியுமே தவிர உதவிட முடியாது மற்றும் சாதாரண தினக்கூலிகளை நினைத்தால் கஷ்டமாக உள்ளது. விரைவில் இதிலிருந்து மீண்டு வருவோம் என நினைப்பதாக தெரிவித்துள்ளார்.

அவரது பேட்டியால் ரசிகர்கள் கோபமடைந்தனர். மேலும் உங்கள் மக்களுக்கு ஒரு சிறு உதவி கூட செய்ய முடியாத நிலையிலா உள்ளீர்கள். யாரும் உங்களிடம் உதவி கேட்கவில்லை என நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுக்கின்றனர்.