போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்கத் தூதுவர்!

0
749

அமைதியான போராட்டக்காரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்(Julie Chung) தனது டுவிட்டர் கணக்கில், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அனைவரும் சுதந்திரம் இருக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.

இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் எனவும் இவ்வாறானவர்களை கைது செய்யக் கூடாது எனவும் அமெரிக்க தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.