மின்வெட்டு நேரம் அதிகரிக்க நேரிடலாம்!

0
542

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி இயந்திரம் ஒன்று செயலிழந்துள்ளந்தமையினால் மின்தடை அமுலாகும் காலப்பகுதி நீடிக்கப்பட வேண்டுமென இலங்கை மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கு மின்தடை அமுல்படுத்தப்படுகின்ற நிலையில் , மின்தடை அமுலாகும் காலப்பகுதியினை 5 மணித்தியாலங்களுக்கு நீடிக்க வேண்டியுள்ளதாகவும் மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.