யாழில் இலக்கு வைக்கப்பட்ட வெளிநாட்டுக் குடும்பம்

0
534

வெளிநாடொன்றிலிருந்து தமது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு வந்த தாய் – மகள் வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் அவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவவ் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் மாவட்டம் குப்பிழான் தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

சம்பவ தினத்தன்று அதிகாலை 4 மணியளவில் மேற்படி வீட்டிற்குச் சென்ற திருடர்களில் ஒருவன் யன்னல் ஊடாக வீட்டிற்குள் நோட்டமிட்டுள்ளான்.

இதனையடுத்துக் குறித்த வீட்டிலிருந்தவர்கள் உரத்துச் சத்தமிடவே திருடர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.