கொழும்பு – காலிமுகத்திடலில் தொடர்ந்து 7ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்திற்குள் இனந்தெரியாத நபர் ஒருவர் புகுந்துள்ளதாக அங்கிந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்ப்பாட்ட களத்திற்குள் புகுந்த நபர் நேற்று இரவு (14) கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரை உடனடியாக வெளியேற்ற இளைஞர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த நபர், கடந்த இரண்டு நாட்களாக சந்தேகம் ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வடை விற்பனை செய்துள்ளார்.
இதனை அவதானித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் குழுவொன்று, அவரை தாக்க முயற்சித்த போது, உண்மை வெளிப்பட்டதுடன் தன்னை மன்னித்துவிடுமாறும் அவர் கூறியுள்ளார்.
இதனால் உடனடியாக அவரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என இளைஞர்கள் கூறிய நிலையில், சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அந்த நபரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
எனினும் அவர் அங்கு என்ன செய்து வந்தார் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது.