இலங்கையின் நிலைமை குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்ட கனேடிய அமைச்சர்

0
417

இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை குறித்து கனேடிய அரசாங்கம் ஆழ்ந்த கவலை அடைவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மக்களின் உரிமைக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இக் கடினமான காலத்தில் இலங்கை மக்களோடு கனேடியர்கள் இருப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொடரும் போராட்டங்களின் விளைவாக கனடா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கான பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.