அஜித் நிவாட் கப்ராலுக்கு வெளிநாடு செல்லத் தடை

0
439

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal ) வௌிநாடு செல்லத் தடை விதித்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, அஜித் நிவாட் கப்ராலை எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் தென் மாகாணங்களின் முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த தனிப்பட்ட முறைப்பாட்டை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல, இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட காலப்பகுதியில், பொதுமக்களின் பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதான குற்றச்சாட்டின் கீழ் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரச தலைவர் சட்டத்தரணி மைத்திரி குணவர்தன மற்றும் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர், இந்த முறைப்பாடு தொடர்பில் மன்றில் முன்னிலையாகி விடயங்களை முன்வைத்துள்ளனர்.