உயர் தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

0
424

2022 கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை எதிர்வரும் ஒக்டோபரில் நடத்துவதற்கும் டிசம்பரில் இடம்பெற வேண்டிய 2022 ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகளை 2023 ஜனவரியில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பிரணவதாசன் தெரிவித்தார்.

கடந்த இரு ஆண்டுகளாக நிலவிய கொரோனா அச்சுறுத்தலால் தேசிய பரீட்சைகளை குறிப்பிட்ட காலப்பகுதியில் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. இதன் காரணமாக சகல பரீட்சைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

இதற்கமைய, 2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சைகள் எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ளது.

மூன்று மாதங்கள் என்ற குறுகிய கால இடைவெளியில் மீண்டும் ஆகஸ்டில் 2022 கல்வி ஆண்டுக்கான உயர்தர பரீட்சைகளை நடத்த முடியாது என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய 2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சைகள் மே மாதம் 21 ஆம் திகதி முதல் ஜூன் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகள் ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.