ரஷ்யாவின் கொடூர தாக்குதல்! திரையரங்கில் 300 பேர் பலி.. அச்சத்தில் உக்ரைன் அதிகாரிகள்

0
499

மரியுபோல் நகரில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ரஷிய படைகள் கடந்த வாரம் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த தாக்குதலில் 300 பேர் வரை கொல்லப்பட்டு இருக்கலாமென அச்சப்படுவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய துருப்புகள் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ்-வை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா தனது தாக்குதலை மும்முரமாக தொடுத்து வருகிறது.  

எனினும், உக்ரைன் படைகள் கடும் சவால் அளிப்பதால், ரஷ்ய துருப்புகளால் இன்னும் தலைநகரை கைப்பற்ற முடியவில்லை. உக்ரைனின் பலநகரை ரஷ்ய துருப்புகள் சுற்றி வளைத்துள்ளன. இவற்றில் முக்கியமான நகரங்களில் ஒன்று மரியோபோல் ஆகும். ஏனெனில், இந்நகரில் மிக முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம் ஒன்று உள்ளது.  

மரியுபோல் நகரில் ரஷ்ய துருப்புகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வழிபாட்டு தலங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்கள், தியேட்டர்கள் போன்றவற்றில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.  

இந்நிலையில், மரியுபோல் நகரில் உள்ள தியேட்டர் ஒன்றில் ரஷ்ய துருப்புகள் கடந்த வாரம் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 300- பேர் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அச்சப்படுவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேரில் கண்டவர்கள் அளித்த தகவலின் படி,

டிராமா திரையரங்கில் 300 பேர் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் வருவதாக மரியுபோல் சிட்டி ஹால் தரப்பில் டெலகிராம் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.