உக்ரைன் – ரஷ்யா போரால் சர்வதேச அளவில் ஏழை-எளிய மக்களுக்கு பாதிப்பு ! ஐ.நா. சபை கடும் எச்சரிக்கை

0
351

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உலகளவில் உள்ள ஏழைகளுக்கு ஏற்படும் முக்கிய பாதிப்பு குறித்து தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் 24ஆம் திகதி உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் புடின் கட்டளையின் பேரில் தாக்குதலை தொடங்கினார்கள். 20 நாட்களாக தாக்குதல் தொடர்ந்து நடக்கிறது.

இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக சர்வதேச அளவில் ஏழை-எளிய மக்களுக்கு பாதிப்பு ஏற்பட தொடங்கி இருப்பதாக ஐ.நா. சபை எச்சரித்து உள்ளது.

உலகின் சூரிய காந்தி எண்ணை தேவையில் 50 சதவீதத்துக்கும் மேல் உக்ரைன் நாடுதான் தருகிறது. அதுபோல உலகின் கோதுமை தேவையில் 30 சதவீதத்தை உக்ரைன் நாடு பூர்த்தி செய்கிறது.

போர் காரணமாக கோதுமை மற்றும் சூரிய காந்தி எண்ணெய் வழங்குவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதனால் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள ஏழை மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் ஐ.நா. சபை கூறி உள்ளது.

மேலும் ஆப்பிரிக்க நாடுகளில் 45 நாட்டு ஏழைகள் கோதுமை கிடைக்காமல் அவதிப்பட நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.