இந்திய ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி

0
551

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் மக்கள் கூடும் அனைத்து இடங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன. அந்த வகையில் இந்திய ஜனாதிபதி மாளிகையிலும் பொதுமக்களுக்கு தேதி குறிRashtrapati-Bhavanப்பிடாமல் தடை விதிக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதை தொடர்ந்து, பொதுமக்கள் பார்வையிட ஜனாதிபதி மாளிகை பிப்ரவரி 6-ம் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் அனுமதி உண்டு. பார்வையாளர் இணைய தளத்தில் முன்பதிவு (நபர் ஒன்றுக்கு ரூ. 50 கட்டணம்) செய்து, குறிப்பிட்ட நேரத்தில் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.