மங்கோலியா பிரதமர் ராஜினாமா

0
361

மங்கோலியா நாட்டின் பிரதமர் உக்னா குரேல்சுக் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மங்கோலியாவில ஒரு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தும் முகாமுக்கு அனுப்பி வைத்தனர். நடுங்கும் குளிரில் மருத்துவமனை உடை மட்டும் அணிந்திருந்த அப்பெண்ணை பச்சிளம் குழந்தையுடன் தனிமை முகாமுக்கு அனுப்பிய காட்சி, டி.வி. சேனல்களில் வெளியானது.

இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர. தலைநகர் உலான் படோரில் நேற்று முன்தினம் போராட்டங்கள் வெடித்தன. உடனே, துணை பிரதமரும், சுகாதாரத்துறை மந்திரியும் ராஜினாமா செய்தனர். இந்த சம்பவம் காரணமாக பிரதமர் உக்னா குரேல்சுக் நேற்று பதவி விலகினார்.