பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி’ 2வது மற்றும் 3வது சீசனில் மீனாட்சி வேடத்தில் நடித்தவர் ரக்சிதா. அவரிற்கு ஜோடியாக சரவணன் கதாபாத்திரத்தில் தினேஷ், இர்பான், கவின் என மூன்று பேர் அடுத்தடுத்து நடித்தனர். Actress Rakshita talk aboutt Saravanam Meenadshi
இதனால் மீனாட்சியாக நடித்த ரக்சிதாவை சமூக வலைதளங்களில் பலர் தவறாக பேச ஆரம்பித்தனர். அத்துடன் செல்லும் இடங்களிலெல்லாம், பல ஹீரோக்களுடன் ஒரே நாடகத்தில் நடிப்பதா என்ற ரீதியில் ரக்சிதாவை படு கேவலமாக விமர்சித்தார்கள். இதனால் மிகவும் நொந்து போனார் ரக்சிதா.
தற்போது சரவணன் மீனாட்சி தொடரின் மூன்றாவது சீஸனும் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் இது பற்றி நாளிதழுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அதில், “சரவணன் மீனாட்சி 3-வது சீஸனில் நடிக்க ஒப்புக்கொண்டது தவறான முடிவு எனவும், அந்த சீஸனின் ஷூட்டிங் தொடங்கிய முதல் நாளிலிருந்தே பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் மூன்றாவது சீஸனின் ஷூட்டிங் ஸ்பாட் நல்ல சூழலாக அமையவில்லையாம். அவரிற்கு நிறைய அவமானங்கள் நிகழ்ந்ததாகவும், அந்த அவமானங்களைத் தட்டிக் கேட்க வேண்டிய இடத்தில் இருந்தவர்கள் கேட்காமல் நழுவினார்கள் எனவும் தெரிவித்தார்.
மொத்தத்தில் இந்த சீஸன் அவரை ரொம்ப காயப்படுத்திட்டுப்போச்சாம்…!