தமிழகத்தில் கன மழை; ஐந்து மாவட்டங்களில் பாடசாலைகள் விடுமுறை

0
597
Holiday schools 5-districts heavy rain Tamilnadu

தமிழகத்தில் கன மழை பெய்துவரும் நிலையில் திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு மாத்திரம் இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இலட்சத்தீவுப் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் அதிகளவிலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை நிலையம் அறிவித்துள்ளது. (Holiday schools 5-districts heavy rain Tamilnadu)

சென்னையில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகின்ற அதேவேளை, அடையாறு, மந்தைவெளி, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு சுமார் 20 நிமிடங்கள் வரை மழை பெய்தது.

அதேபோன்று, இன்று காலை மீண்டும் கன மழை பெய்ய ஆரம்பித்துள்ள நிலையில், கிண்டி, எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிறிது நேரம் கன மழை பெய்தது.

இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகின்றது. வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்படுகின்றது.

அதேபோன்று புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, தருமபுரி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது.

சேலத்தில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் நேற்றிரவில் மழை பெய்து வருகின்றது.

மேற்குத் தொடர்ச்சி மலை, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பெய்துவரும் கன மழையால் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், அரக்கோணம், காஞ்சிபுரம், கல்பாக்கம், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய இடங்கள் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்து வருகின்றது.

தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக விடிய விடிய கனமழை பெய்து வருகின்றது. வேதாரண்யம், தலைஞாயிறு, கோடியக்கரை, செம்போடை, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது.

கனமழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, சேலம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு மாத்திரம் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சென்று இதர பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி மாவட்ட பாடசாலைகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Holiday schools 5-districts heavy rain Tamilnadu