பிரியமானவளே போன்ற பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்ற சின்னத்திரை நடிகையான நிலானி, காந்தி லலித்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். Actress Nilani bed selfi controversy gossip
இந்நிலையில், சூட்டிங்கிலிருந்த நடிகை நிலானியிடம், அவரின் காதலர் காந்தி லலித்குமார் திருமணம் செய்ய சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கோபமடைந்த அவர், தன் காதலர் தன்னை திருமணத்திற்கு வற்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் காந்தி லலித்குமார் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், இறப்பதற்கு முன் அவர் சில புகைப்படங்களையும், வீடியோவையும் வெளியிட்டிருந்தார். அதில், படுக்கையில் இருவரும் ஒன்றாக உறங்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
அத்துடன் நிலானியும், காந்தி லலித்குமாரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானது. அதில், எங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. நிலானி எனக்கு இன்னொரு தாய். அவள் எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம் என உருக்கமாக பேசும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
ஆனால், திருமணம் செய்து கொள்ள தன்னை வற்புறுத்தினார் என்றே நிலானி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். நிலானி, காதலனுடன் குடும்பம் நடத்திவிட்டு அவரை விட்டு பிரிந்திருக்கலாம். அதனால் விரக்தி அடைந்த காதலர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
மேலும், தற்கொலை செய்து கொண்ட நடிகை நிலானியின் காதலர் வெளியிட்ட புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.