ரஜினி ஜோடியாக கபாலி, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா, தோனி ஆகிய படங்களில் நடித்த நடிகை ராதிகா ஆப்தே, லிப்டில் தனக்கு நடிகர் ஒருவர் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார். Actor misbehaved Radhika apte controversy
சமீபத்தில் படப்பிடிப்பில் முதுகில் காயம் ஏற்பட்டு, வலியால் துடித்தார். இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்து, தங்கி இருந்த ஓட்டலுக்கு செல்வதற்காக ஓட்டல் லிப்டில் செல்லும்போது, அவருடைய சக நடிகர் மட்டுமே இருந்துள்ளார்.
அப்போது அந்த நடிகர் லிப்டுக்குள் திடீரென்று ராதிகா ஆப்தேயிடம் அத்துமீறி பேசினார். அவர், நள்ளிரவில் ஏதேனும் உதவி தேவை என்றால் அவரிடம் சொல்லுமாறும். அங்கு வந்து முதுகை தடவி விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராதிகா ஆப்தே, தயாரிப்பாளரிடம் கூறினாராம், அதன் பிறகு அந்த நடிகர் இவரிடம் மன்னிப்பு கேட்டார் என ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.