யாழ். பல்கலைக்கழகத்தில் கைக்குண்டு மீட்பு

0
734
Jaffna University grenade Recovery

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் கைக்குண்டு ஒன்று இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளது. (Jaffna University grenade Recovery)

பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிவன் ஆலயத்தில் புனரமைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், மதில் கட்டுவதற்காக மண்ணை தோண்டிய போதே கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைக்குண்டை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Jaffna University grenade Recovery