பிக்பாஸ் தமிழ் 2வது சீசன் போட்டியின் விறுவிறுப்பை அதிகரிக்க முதல் சீசன் போட்டியாளர்களை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்து வந்துள்ளனர். Bigg boss Kaajal worried aboutt biggboss
பிக்பாஸ் வீட்டிற்கு முதல் சீசன் போட்டியாளர்கள் சினேகன், ஆரவ், காயத்ரி, ஆர்த்தி, வையாபுரி, சுஜா வருணி என 6 பேர் வந்துள்ளனர். ஆனால் முதல் சீசனில் பங்கேற்றிருந்த காஜல் பசுபதியை இதுவரை பிக்பாஸ் குழுவினர் அழைக்கவில்லை.
இது தொடர்பாக காஜல் பசுபதியிடம் டுவிட்டரில் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு காஜல் பசுபதி “என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரச்சொல்லி கூப்பிடமாட்டார்கள்.. ஏனென்றால் நான் நிகழ்ச்சி பற்றி வெளியில் குறைசொல்லி பேசிவிட்டேனே” என தெரிவித்தார்.