ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரதானமான குற்றச்சாட்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்திருப்பதே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். main allegation against Sri Lanka Freedom Party join UNP President
அவ்வாறு ஏன் செய்தது என விளங்க முடியாதவர்களே இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். கடந்த அரசாங்கத்தினால் செய்ய முடியாது போன விடயங்களை இணைந்து செய்துள்ளோம். நாடு இழந்திருந்த சர்வதேச ஒத்துழைப்பை மீண்டும் வெற்றி பெற்று இன்று நாட்டின் அபிவிருத்திக்கு பாரியளவில் சர்வதேசத்தின் உதவியை பெற்றுக்கொள்ள இந்த இணைவினால் முடிந்துள்ளது எனவும் ஜனாதிபதி எடுத்துக் கூறியுள்ளார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நான் உரையாற்றவுள்ளேன். இதன்போது, பாதுகாப்பு படையினருக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து அவர்களை விடுவிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் புதிய பிரகடனம் ஒன்றை செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள பல்வேறு சவால்கள் அதன்மூலம் தீர்க்கப்படுமென்று தான் நம்புவதாகவும் நேற்று நிவித்திகலயில் இடம்பெற்ற கட்சிக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
tags :- main allegation against Sri Lanka Freedom Party join UNP President
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பெல்லன்னவில பகுதியில் தீ விபத்து; கர்ப்பிணிப் பெண் பலி
- கடலில் மிதந்து வந்த விநாயகர் சிலை
- வடமாகாண முதலமைச்சர் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலை
- இராணுவ, பொலிஸ் அதிகாரிகளை பணியில் இருந்து இடைநிறுத்த வேண்டும்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அலாய்னா பி டெப்லிட்ஸ் நியமனம்
- நாயாற்றில் மீண்டும் பதற்றம்; கிளர்ந்தெழுந்த பொதுமக்கள்
- முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்து; கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தாலுக்கு அழைப்பு
- வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் பெண்ணொருவர் கைது
- வட்டவளையில் உணவு ஒவ்வாமையினால் 56 மாணவர்கள் வைத்தியசாலையில்