மட்டக்களப்பில் மூன்று பேரூந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல்

0
574
Attack three buses Batticaloa

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மூன்று பேரூந்து வண்டிகள் மீது இன்று கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (Attack three buses Batticaloa)

அத்துடன், இந்த தாக்குதல் சம்பவத்தில் சாரதி ஒருவர் உட்பட பயணியொருவரும் கயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு புல்லுமலையில் அமைக்கப்பட்டு வருகின்ற போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பேரூந்துகள் மீது இவ்வாறு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி டிப்போவுக்கு சொந்தமான இரண்டு பஸ்வண்டிகளும் வாகரை டிப்போவுக்கு சொந்தமான ஒரு பேரூந்து வண்டியுமே குறித்த கல்வீச்சு தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்துள்ளது.

தாக்குதலுக்குதலுக்கு இலக்காகிய களுவாஞ்சிகுடி டிப்போவுக்கு சொந்தமான இரண்டு பேரூந்து வண்டிகளில் ஒன்று கல்முனையில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

இதன்போது, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதினெட்டாம் கட்டை பிரதேசத்தில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

மற்றைய இரண்டு பேரூந்து வண்டிகளும் மட்டக்களப்பில் இருந்து கல்முனையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் போது களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் வைத்து கல்வீச்சுக்கு இலக்காகி காண்ணாடிகள் சேதடைந்துள்ளன.

குறித்த பேரூந்து வண்டியை சேர்ந்த சாரதிகள் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திலும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும் தங்களது முறைப்பாடுகளை செய்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Attack three buses Batticaloa