ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் இன்றைய தினம் கொழும்பில் முன்னெடுக்க ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிப் பேரணியில் 75 ஆயிரம் பேர் வரையில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. (Masked groups rally Joint opponent)
இந்தப் பேரணியில் முகமூடி அணிந்த குழுக்களும் பங்கேற்கவுள்ளதாகவும் புலனாய்வுத்துறைக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், குறித்த பேரணி கொழும்பின் எப்பகுதியில் இருந்து ஆரம்பமாகும் என்பது இதுவரை வெளிவரவில்லை என்றும் ஜனாதிபதி இல்லம், அலரி மாளிகை உள்ளிட்டவை ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அவற்றை தமது கட்டுப்பாட்டில் எடுக்கவுள்ளதாகவும், முகமூடி அணிந்த குழுக்களும் பங்கேற்கவுள்ளதாகவும் பரிகார பூஜைகளும், தெய்வ பரிகார நடவடிக்கைகளும் அங்கு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸாரால் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நாட்டை பிளவுபடுத்துதல், இராணுவத்தினரை வேட்டையாடுதல், மத்தலை விமான நிலையத்தை விற்பனை செய்ய முயற்சி, சிங்கப்பூர் ஒப்பந்தம், வாழ்க்கைச் செலவு உயர்வு, அதிகரித்த வரிச்சுமை,
மத்திய வங்கி பிணை முறி மோசடி, மாகாண சபை தேர்தலை திட்டமிட்டு பிற்போடுகின்றமை உள்ளிட்டவற்றுக்கு எதிராகவே ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுக்கவுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- போதைப்பொருள் வியாபாரிகளுக்கு தண்டனை வழங்க விசேட நீதிமன்றம்
- பதுளையில் ஒன்றிணைந்த எதிரணியினரின் பேரூந்தின் மீது தாக்குதல்
- 16 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேக நபர் விளக்கமறியலில்
- புலிக்கொடி வைத்திருந்த விவகாரம்; 12 பேருக்கு விளக்கமறியல்
- அத்துருகிரியவில் கைக்குண்டு, ஹெரோயினுடன் இருவர் கைது
- புத்தர் சிலைகளுடன் மூன்று பேர் கைது
- நல்லூர் திருவிழாவில் தீ விபத்து; இருவர் காயம்
- தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்
- ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Masked groups rally Joint opponent