கேரள மாநிலத்தை சேர்ந்த சித்தார்த், மனைவி ஸ்மிரிஜாவுடன் மதுரவாயலை அடுத்த அடையாளம் பட்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.Yaagavarayinum Naa Kaakka actor wife suicide
இவர்கள் இருவரும் வரவேற்பு நிகழ்ச்சிக்கான கார்டுகளை டிசைன் செய்யும் அலுவலகத்தை வீட்டிலேயே வைத்து நடத்தி வந்தனர்.
நேற்று காலை வீட்டு அறைக்குள் இருந்து ஸ்மிரிஜா வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சித்தார்த் கதவை தட்டினார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவர் மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்ற போது ஸ்மிரிஜா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் ஸ்மிரிஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சித்தார்த் ‘யாகாவாராயினும் நா காக்க’ என்ற தமிழ்ப்படத்தில் நடித்துள்ளார் எனவும் அவருக்கும், ஸ்மிரிஜாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இருவரும் ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு நள்ளிரவு வீடு திரும்பியுள்ளனர்.
வரும் வழியில் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வீட்டிற்கு வந்தவுடன் ஸ்மிரிஜா கோபித்துக்கொண்டு அவரது அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார். சித்தார்த் வீட்டின் ஹாலில் படுத்துக்கொண்டார் பின்பு காலையில் எழுந்து பார்த்தபோதுதான் மனைவி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.