கிளிநொச்சியில் இன்று முதியவர் ஒருவர் பொலிஸார் இலஞ்சம் பெறுவதற்கு எதிப்புத் தெரிவித்து பிரதம நீதியரசர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் மரத்தில் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார். Kilinochchi Old Man Protest Oppose Police Bribes Tamil News
கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
அதன் பின்னர் மேடை நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் உரையாற்றிக்கொண்டிருந்தார்.
அதன் போது மேடையில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசிரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், நீதிபதிகள் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிபொலிஸ் மா அதிபர், ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
அத் தருணத்தில் மேடைக்கு நேர் எதிராக ஏ9 பிராதான வீதியின் ஓரமாக காணப்பட்ட பூவரசு மரத்தில் இருந்து முதியவர் கையில் ஒரு பதாகையை வைத்துக்கொண்டு உரத்த குரலில் சத்திமிட்டுக்கொண்டிந்தார்.
உடனடியாக பொலிஸார் மற்றும் சடடத்தரணிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று முதியவருடன் பேசி அவரை மரத்தில் இறக்கிய போது அவர் கையில் வைத்திருந்த பதாகையில் வேண்டாம் எனும் தலைப்பில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவது உங்களுக்கு சேவை செய்வதற்கே, உங்ளின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அவர்களுக்கு நீங்கள் இலஞ்சம் கொடுக்கத் தேவையில்லை எனவும் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்பட வேண்டியது உங்களின் பொறுப்பாகும் எனவும் எழுதப்பட்டிருந்தது.
இதனை கையில் வைத்திருந்த முதியவர் பொலிஸார் இலஞ்சம் வாங்குவதாகவும், குறிப்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் உள்ள ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் இலஞ்சம் பெறுவதாகவும் தன்னை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
- ஜாஎல பகுதியில் ஆப்பிள் போதைப்பொருள் மாத்திரைகள் பறிமுதல்
- இன்று கூடவுள்ளது தேர்தல் ஆணைக்குழு
- மனைவியை தாக்க முற்பட்ட நபரை கோடாரியால் தாக்கி கொலை செய்த கணவர்
- யாழ். குடாநாட்டில் பொதுமக்களின் 04 இடங்களை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்
- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில்
- பிள்ளையான் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
- குளவி தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் பலி