அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் ஜாக்சன்வில் நகர் அமைந்துள்ளது. மதுபான விடுதிகள் அதிகம் உள்ள இந்நகரில் வார விடுமுறை தினங்களில் அதிகளவு கேளிக்கை நிகழ்சிகள் நடைபெறுவது வழக்கம். Shotgun during video game America 4 killed tamil news
அதைப்போல அந்நகரில் உள்ள ஜாக்சன்வில் லேண்டிங் எனும் வணிக வளாகத்தில் இன்று வீடியோ கேம் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த கேம் விளையாட்டில், பல்வேறு நபர்கள் போட்டியாளர்களாகவும், பார்வையாளர்களாகவும் பங்கேற்றனர்.
அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், மக்களை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், இரண்டு பேர் கேம் விளையாடுகின்றனர் அப்போது பின்னால் அடுத்தடுத்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்கிறது. அதைத்தொடர்ந்து மக்கள் பீதியில் அலறும் சத்தமும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ஊடகங்களிடம் கூறுகையில், ’கேம் விளையாட்டில் பங்கேற்ற நபர், தோல்வியடைந்ததால் அந்த விரக்தியில் மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்’ என தெரிவித்தார்.
கேம் விளையாட்டில் பங்கேற்ற டிரினி ஜோகா எனும் நபர், ’என் கட்டை விரலில் குண்டு பாய்ந்துள்ளது, நான் மிகவும் அதிர்ஷ்டசாலி’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
tags :- Shotgun during video game America 4 killed tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- என்னை பதவி நீக்கம் செய்தால் அமெரிக்க பொருளாதாரமே சீர்குலையும் – டிரம்ப் எச்சரிக்கை
- அமெரிக்காவின் ஹவாய் தீவினை தாக்கிய “ஹரிகேன் லேன்” சூறாவளி!!
- அவுஸ்ரேலியாவின் புதிய பிரதமராக ஸ்காட் மோரிசன் தெரிவு!
- உலகில் ஏழு நாட்களில் 144 நிலநடுக்கங்கள்…! அடுத்து நடக்கப்போவது இதுதான்: நிபுணர்கள் எச்சரிக்கை
- பாரிஸ் நகரில் ஐ.எஸ் தாக்குதலில் மூவர் பலி!!
- உலகில் விற்கப்படும் மருந்துகளில் 10 சதவீதம் போலியானது – சர்வதேச சுகாதார நிறுவனம் கவலை
எமது ஏனைய தளங்கள்