அழுத குழந்தைக்கு சற்றும் யோசிக்காமல் தாய்ப்பால் கொடுத்த பொலிஸ் அதிகாரி : குவியும் பாராட்டுகள்

0
316
police officer breastfeeding without thinking baby accumulation praise

அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண் பொலிஸ் அதிகாரி Celeste Jaqueline Ayala என்பவர், குழந்தைகள் வைத்தியசாலை ஒன்றில் பாதுகாப்பு பணியில் இருந்தார். police officer breastfeeding without thinking baby accumulation praise

அப்போது, ஆதரவற்ற ஆண் குழந்தை ஒன்று வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த குழந்தை பசியால் அழுதது. யாரும் அதை கவனிக்கவில்லை. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அந்த பொலிஸ் அதிகாரி, அந்தக் குழந்தையை தூக்கி தாய்ப்பால் கொடுத்தார். இந்த விவகாரம் அர்ஜென்டினாவின் துணை அதிபருக்கு, தெரிய வந்தது. உடனே அவர், செலஸ்டீயை அழைத்து பாராட்டி, பதவி உயர்வு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பொலிஸ் அதிகாரி Ayala கூறியபோது, ‘அந்த குழந்தை அழுது கொண்டிருந்தபோது பசியால் தான் அழுகிறது என்பதை கண்டுகொண்டேன். உடனே அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க அருகிலிருந்த மருத்துவர் ஒருவரிடம் அனுமதி பெற்று தாய்ப்பால் கொடுத்தேன். தாய்ப்பால் கொடுத்ததும் அந்த குழந்தையும் அழுகையை நிறுத்திவிட்டது. மேலும், இதற்கு பொதுமக்களிடம் இருந்து இவ்வளவு பெரிய பாராட்டுக்கள் கிடைக்கும் என்று நினைத்தே பார்க்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

tags :- police officer breastfeeding without thinking baby accumulation praise

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்