வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ள கேரளா மாநிலத்திற்கு நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் நிதி வழங்கியுள்ளார். Kerala Flood Vikram Donate rs35 Lakh tamil news
அதாவது, கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் கேரள மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விக்ரம் தன் பங்குக்கு ரூ.35 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இதற்கு முன்னதாக நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விஜய்சேதுபதி, உதயநிதி, சிவகார்த்திகேயன், இயக்குனர் சங்கர், நடிகை ரோஹினி, நயன்தாரா உள்ளிட்டோர் கேரளாவுக்கு நிதி உதவி அளித்துள்ளனர். இவர்களுடன், தென்னிந்திய நடிகர் சங்கமும் நிதி அளித்துள்ளது.
<<MOST RELATED CINEMA NEWS>>
* மும்பையில் கோலாகலாமாக நடைபெற்ற பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..! (படங்கள் இணைப்பு)
* வெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..!
* விஜயகாந்தின் மகனுக்காக கதைக்கேட்கும் தளபதி விஜய்..!
* சர்கார் படத்தின் ‘ரா ரா ராட்சசன்..’ பாடல் லீக் : அதிர்ச்சியில் படக்குழு..!
* 60 வயது மாநிறம் திரைப்பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!
* சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது : 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மெர்சல் படம்..!
* நவம்பர் ரேஸில் இருந்து பின்வாங்கிய ’2.0’ : ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்..!
* வனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..!