கருணாநிதியின் பேனா குறித்த விஷாலின் விருப்பம்

0
319
Karunanithi pen vishal desire tamil news

அண்மையில் காலமான திமுக தலைவர் கருணாநிதியின் பேனாவை, தற்போது கட்டப்பட்டு வரும் நடிகர் சங்கக் கட்டிடத்தில் வைக்க வேண்டும் என நடிகர் விஷால் விருப்பம் தெரிவித்துள்ளார். Karunanithi pen vishal desire tamil news

தலைவர் கருணாநிதி காலமானதை தொடர்ந்து,  தமிழ்த் திரைத்துறையினர் சார்பில் நினைவேந்தல் கூட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர் சங்கப் பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், நடிகர் ரஜினி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கூட்டத்தில் பேசிய விஷால், “திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்துவது எமது கடமை. திரு.ஸ்டாலின், நடிகர் ரஜினி உள்ளிட்ட எல்லோரும் வந்ததற்கு நன்றி. கருணாநிதி அவர்கள் மறைந்த போதும் அவரது சாதனைகள் மறையாது. இன்னும் எத்தனை தலைமுறையானலும் அவரை மறக்க முடியாது. மேலும் நடிகர் சங்கம் சார்பில் நாங்கள் கேட்டுக் கொள்வது எதுவென்றால், அவரது பேனாவை புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்கக் கட்டிடத்தில் வைக்க வேண்டும் என்பது தான்.” என்றார்.

அவர் ஆசை நிறைவேறுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags: Karunanithi pen vishal desire tamil news

<<RELATED CINEMA NEWS>>

எமது ஏனைய தளங்கள்