யாழில் வாள்வெட்டு : தேடப்பட்டவர் பொலிஸில் சரணடைந்தார்

0
503
sword attack suspect surrenders jaffna

யாழ்ப்பாணம் நீர்­வேலி வாள்­வெட்டுச் சம்­ப­வத்தில் தொடர்புபட்டவர் என்ற குற்­றச்­சாட்­டில் தேடப்­பட்டு வந்­த­வ­ர் சரணடைந்த நிலையில் கைது செய்­யப்பட்டு உள்­ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்த சந்தேக நபரை விளக்கமறியில் வைக்க நீதி­மன்று உத்­த­ர­விட்­டது.(sword attack suspect surrenders jaffna)

யாழ்ப்பாணம் நீர்­வேலி செம்­பாட்டு பிள்­ளை­யார் ஆலயத்திற்குள் கடந்த மே மாதம் இடம்பெற்ற வாள்­வெட்டு சம்பவத்தில் அப் பகுதியை சேர்ந்த இரு­வர் காயமடைந்திருந்தனர். இந்த சம்பத்துடன் தொடர்புடையவர்களாக கூறப்பட்டு இணு­வில் தாவடி போன்ற பகுதிகளை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்­கள் தொடர்ந்­தும் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இச் சம்பத்துடன் தொடர்புடைய ஏனையோரை பொலிஸார் தேடி வரும் நிலையில் சந்தேகநபர் சட்­டத்­த­ரணி ஒரு­வர் மூல­மாக யாழ்ப்­பாண நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

எனி­னும் அவ­ரைப் காவல் நிலை­யத்­தில் சர­ண­டை­யு­மாறு நீதி­வான் தெரி­வித்­த­தை­ய­டுத்து நேற்று முன்­தி­னம் அவர் காவல் நிலை­யத்­தில் சட்­டத்­த­ரணி ஊடாக சரணடைந்தார். அத்துடன் குறித்த நபர் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இவர் சார்பில் முன்னிலையான சட்­டத்­த­ரணி பிர­தீ­பன், சந்­தே­க­ந­ப­ருக்­கும் வாள்­வெட்­டுச் சம்பவத்திற்கும் தொடர்­பில்லை என்றும் நண்பர் ஒருவரை சந்திக்கவே அவ் இடத்திற்குச் சென்றதாகவும் கூறினார்.

வழக்கை ஆராய்ந்த யாழ்ப்­பாண நீதி­மன்ற மாவட்ட நீதி­ப­தி­யும் மேல­திக நீதி­வா­னு­மா­கிய வி.இரா­மக்­க­ம­லன், சந்­தேக நபரை இன்­று­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு உத்தரவிட்டார்.

அவ்வழியாக வாகனத்தில் செல்வோரும், தகவல் அறிந்து குறித்த பகுதியில் தேடுதல் நடத்தி தங்கம் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites

Tags:sword attack suspect surrenders jaffna,sword attack suspect surrenders jaffna,