சீதுவை கத்தோலிக்க தேவாலயத்தில் திருட்டு; பொலிஸில் முறைப்பாடு

0
896
Theft Catholic church Seeduwa

சீதுவை அமந்தொளுவ பிரதேசத்திலுள்ள கத்தோலிக்க தேவாலயத்தின் காணிக்கை பெட்டிகள் மூன்றை உடைத்து, அதில் இருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (Theft Catholic church Seeduwa complaints police)

இந்த தேவாலயத்தின் பிரதான கதவை உடைத்து, தேவாலயத்தினுள் இருந்த காணிக்கைப் பெட்டி மற்றும் வெளியே வைக்கப்பட்டிருந்த இரு காணிக்கை பெட்டிகளையும் உடைத்து பணம் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, குறித்த தேவாலயத்தின் சிலை ஒன்றும் சேதமடைந்துள்ளதுடன், இங்கு சுற்றியுள்ள பிரதேசங்களில் ஹெரொயின் மற்றும் போதைப் பொருட்களின் விற்பனை அதிகமாக நடைபெறுவதனால் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களால் இவ்வாறான திருட்டு சம்பவங்களும் நடைபெறுவதாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில்புரியும் பெண்களின் தங்கச் சங்கிலிகள் பறிக்கும் சம்பவங்களும் இடம்பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Theft Catholic church Seeduwa complaints police