முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் கொழும்பில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர். North Chief Minister Vigneswaran Behind Ava Violence Group Tamil News
இதில் பங்கேற்ற தூய ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கமன்பில, இலங்கையில் இடம்பெறும் அனைத்துக் குற்றச்செயல்களின் பின்னணியிலும் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்படுகிறாரா என சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:
தன்னிடம் பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் இரண்டு வாரங்களில் வடக்கில் செயற்படும் ஆவா குழுவை ஒழித்துக் காட்டுவேன் என்று விக்னேஸ்வரன் கூறுகின்றார். இரண்டு வாரங்களில் குற்றச் செயல்களை குறைத்துக் காட்ட முடியுமென அவர் கூறியதால், தற்போது நாட்டில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்குப் பின்னாலும் விக்னேஸ்வரன் இருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.
மகிந்த ஆட்சியில் மாகாண சபைகளுக்குப் பொலிஸ் அதிகாரங்களை வழங்காமலேயே அனைத்துக் குற்றங்களையும் எம்மால் கட்டுப்படுத்த முடிந்தது. இன்று நிலமை வேறு விதமாகக் காணப்படுகின்றது. இதற்காக விக்னேஸ்வரனுக்குப் பொலிஸ் அதிகாரத்தை வழங்க முடியாது.
இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதன் மூலமே இவற்றை தடுத்து நிறுத்த முடியும் என அவர் கூறியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்