கல்வியே அனைத்திற்கும் தீர்வினை பெற்றுக்கொடுக்கும் – ஜனாதிபதி நம்பிக்கை

0
369
education can solution all problems president maithripala sirisena

கல்வியின் மூலம் ஒரு நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். education can solution all problems president maithripala sirisena

நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவிருக்கும் பிள்ளைகளை கல்விமான்களாக உருவாக்குவதற்கு கல்வித்துறையில் பாரிய மாற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அநுராதபுரம் சுவர்ணபாலி வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கல்வியின் மூலமே ஒரு மனிதனிடம் சிறந்த ஒழுக்க பண்பாடுகள் உருவாகின்றன எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கல்விக்காக முடியுமான அனைத்து வசதி வாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதென்று சுட்டிக்காட்டினார்.

1876ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நீண்ட வரலாற்றைக்கொண்ட பாடசாலையான அநுராதபுர சுவர்ணபாலி வித்தியாலயத்தின் 142 வருட கல்விப் பயணத்தை ஜனாதிபதி பாராட்டினார்.

இன்று முற்பகல் கல்லூரிக்கு சென்ற ஜனாதிபதியை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
education can solution all problems president maithripala sirisena

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites