தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் தீயிட்டு எரிக்கப்பட்டன. (Burning nets Fired Vavuniya)
வவுனியா மாவட்டத்தில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபையினரால் கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று காலை 10.00 மணியளவில் நீதிமன்ற உத்தரவிற்கமையாக வவுனியா மாவட்டங்களுக்கான மாவட்ட நீர் உயிரினச் செய்கை உத்தியோகத்தர் யோ. நிசாந்தன் தலைமையில் தீயிட்டு எரிக்கப்பட்டன.
மாமடு, வவுனியாகுளம், பாவற்குளம், மடுக்கந்தை போன்ற பிரதேசங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 15 இலட்சம் பெறுமதியான வலைகளே இன்று தீயிட்டு கொழுத்தப்பட்டன.
கடந்த சில வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது 15 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மன்னாரில் தொடரும் அகழ்வு பணிகள்; 66 மனித எச்சங்கள் மீட்பு
- மிருசுவில் பகுதியில் வாள்வெட்டுக் குழுவினர் தப்பித்துச் சென்ற கார் மீட்பு
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Burning nets Fired Vavuniya