அம்பாறையில் சூறாவளி : 217 வீடுகள் சேதம் : பலர் பாதிப்பு

0
611
strong wind house damaged Ampara

அம்பாறையில் வீசிய கடும் காற்றினால் 217 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ.வணிகசிங்க தெரிவித்துள்ளார்.(strong wind house damaged Ampara,Tamilnews,Srilanka Tamilnews)

நககம்புற பகுதியில், 150 வீடுகளும், திஸ்ஸபுற பகுதியில் 22 வீடுகளும், கரங்காவ பகுதியில் 28 வீடுகளும், மிஹிதுபற பகுதியில் 11 வீடுகளும் , சத்தாதிஸ்ஸபுற பகுதியில் 3 வீடுகளும், ஜயவர்தனபுற பகுதியில் 2 வீடுகளுக்கும் இவ்வாறு சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதிகளைச் சேர்ந்த கிராம அலுவலர்களினால் சேதமடைந்த வீடுகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் திரட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உலர் உணவுகள் வழங்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags: strong wind house damaged Ampara,strong wind house damaged Ampara,