கடந்த கோடையின் போது 8 வயது சிறுவனை சில மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் பூட்டி வைத்திருந்து கொடுமை படுத்தியமை தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. குறித்த வழக்கு தொடர்பான வாக்கு மூலத்தை அச்சிறுவனிடமிருந்து பெற்றுக் கொண்டதோடு, அவனின் தங்கை மற்றும் அவனை பரிசோதித்த மருத்துவர் அதனை உறுதிப்படுத்தினர்.abused 8 year old child locked chest tamil news
“அப்பா வேலைக்கு சென்றாலும், அம்மா தனியாக வீட்டில் இருந்தாலும், முகாமிற்கு வந்த நாளிலிருந்து அந்த பெட்டிக்குள் தான் தூங்கச் செய்வார்கள். கை கால்களை கட்டி உள்ளே போட்டு விடுவார்கள். நான் தப்பித்து வெளியே வந்தால், கைகளை நெஞ்சோடு சேர்த்து கட்டி பெட்டிக்குள்ளே வைத்து பூட்டி விடுவர். அந்த பெட்டிக்குள் தான் நான் மலசலங்களை கழிக்க வேண்டிய நிலைகளும் உண்டு, என்றான் சிறுவன்.
ஒரு முறை பக்கத்து முகாமுக்குள் இருந்த ஒருவரின் குளிர்சாதன பெட்டிக்குள் இருந்து சாப்பாட்டை திருடிய போது தான் அந்த சிறுவனின் நிலை வெளிச்சத்திற்கு வந்தது. சோதனையில், சிறுவன் ஒரு மாதத்திற்கு மேல் உண்ணாமல் இருந்தது தெரிய வந்தது.
சிறுவனின் உடலில் காணப்பட்ட ஆறாத காயங்கள், கிருமி தொற்று, கால் வீக்கம் மற்றும் கறுப்பு புள்ளிகள் இதனை உறுதிப்படுத்துவதாக மருத்துவர் தெரிவித்தார்.
சிறுவனின் தாய் தந்தையர் ஜேர்மனி நாட்டவர்கள். அந்த நாட்டிலும் சிறுவனை கொடுமைப்படுத்தியதற்காக தகப்பன் தண்டனை அனுபவித்தார். பின்னர் அவர்கள் நெதர்லாந்துக்கு வந்துள்ளனர்.
தகப்பன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்ட போதிலும், தாய் அது பற்று தனக்கு எதுவும் தெரியாது என மறுத்து விட்டார். இந்த தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இரு தங்கைகள் உள்ளனர்.
மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
tags :- abused 8 year old child locked chest tamil news
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு
எமது ஏனைய தளங்கள்