Aubervilliers இல் இடம்பெற்ற மோசமான தீ விபத்தில் கர்ப்பிணி தாய் ஒருவரும் அவரின் மூன்று பிள்ளைகளும் உயிரிழந்தனர். இந்த வழக்கில் குற்றவாளியாக 10 வயதான சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். 10 year old boy fired 5 stroey building tamil news
கடந்த வியாழக்கிழமை Aubervilliers இலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ பரவியிருந்தது. தீ, ஐந்து தளங்களுக்கு பரவி மிக மோசமான தீ விபத்தாக பதிவாகியுள்ளது.
விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர், 10 வயதான சிறுவன் ஒருவனை கைது செய்து விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளனர். ‘லைட்டர்’ கருவி ஒன்றை வைத்து தீ மூட்டிவிட்டு அதை அணைக்க மறந்துள்ளதாக சிறுவன் தெரிவித்ததாக காவற்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 தளங்கள் கொண்ட குறித்த கட்டிடத்தின் மேல் 5 தளங்களும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. இச்சம்பவத்தில் 33 வயதான கர்ப்பிணி பெண் ஒருவரும், 1, 4 மற்றும் 6 வயதுடைய மூன்று குழந்தைகளும் பலியாகியதோடு, 6 பொதுமக்களும் மூன்று தீயணைப்பு படை வீரர்களும் காயமடைந்தனர். பொபினி நகர காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
tags :- 10 year old boy fired 5 stroey building tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பிரான்ஸ் ரயிலில் நிறைமாத கர்ப்பிணிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!
- பிரான்ஸில், குத்தாட்டம் போட்ட பிரபல பொப் பாடகி சிறையில்!
- டொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்!
- நான் தான் இப்போ கேப்டன் நான் சொல்றத கேளுங்க : பாலாஜியிடம் கெத்து காட்டும் ஐஸ்