மன்னாரில் பரபரப்பு – கடத்­தப்­பட்ட சிறு­வன்- 4 மணி­நே­ரத்­தில் மீட்பு  

0
520
Police recover kidnapped boy mannar

மன்­னார் முருங்­க­னில் ஆலய வழி­பாட்­டுக்கு பெற்றோ­ரு­டன் சென்ற 2 வய­துச் சிறு­வன் கடத்­தப்­பட்டு 4 மணி நேரத்­தில் பொலி­ஸா­ரி­னால் மீட்­கப்­பட்­டுள்­ளான். இந்­தச் சம்­ப­வத்­தால் அந்­தப் பகு­தி­யில் நேற்­றுப் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.(Police recover kidnapped boy mannar, Tamilnews, Srilanka tamilnews)

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

ஆல­யத்­துக்­குப் பெற்­றோ­ரு­டன் சிறு­வன் நேற்­றுப் பகல் ஒரு மணி­ய­ள­வில் சென்­றுள்­ளான். சிறிது நேரத்­தின் பின்­னர் சிறு­வ­னைக் காணாது பெற்­றோர் தேடி­யுள்­ள­னர். உட­ன­டி­யாக முருங்­கன் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. பொலி­ஸார் துரி­த­மாக விசா­ரணை மேற்­கொண்­ட­னர்.

ஆல­யத்­துக்கு வந்த திருக்­கோ­வி­லைச் சேர்ந்­த­வர், வழி­பாடு முடி­வ­டை­வ­தற்கு முன்­னர் இடை­யில் வெளி­யே­றி­ய­மை­யைப் பொலி­ஸார் கண்­ட­றிந்­த­னர். திருக்­கோ­வில் பொலி­ஸா­ருக்கு தக­வல் வழங்­கப்­பட்­டது. வவு­னி­யாப் பொலி­ஸார் மற்­றும் மன்­னார் மாவட்­டத்­தின் ஏனைய பொலிஸ் பிரி­வு­க­ளும் உசார்­ப­டுத்­தப்­பட்­டது.

வழி­பாடு முடி­வ­டைய முன்­னர் வெளி­யே­றிய திருக்­கோ­வி­லைச் சேர்ந்த நப­ரின் வீட்­டைப் பொலி­ஸார் இனம்­கண்டு கொண்­ட­னர். சந்­தே­க­ந­பர் வீட்­டில் இருக்­க­வில்லை.

வவு­னியா பேருந்து நிலை­யத்­தி­லி­ருந்து மன்­னார் நோக்­கிச் செல்­லும் பேருந்­தில் சந்­தே­க­ந­பர் சிறு­வ­னு­டன் ஏறி­யதை வவு­னி­யாப் பொலி­ஸார் அவ­தா­னித்­த­னர். சந்­தே­க­ந­ப­ரைப் பொலி­ஸார் மடக்­கிப் பிடித்­துக் கைது செய்­த­னர். மாலை 5 மணி­ய­ள­வில் சிறு­வனை பெற்­றோ­ரி­டம் பொலி­ஸார் ஒப்­ப­டைத்­த­னர்.

சிறு­வ­னைக் கடத்­தி­ய­மைக்­கான கார­ணம் உட­ன­டி­யாக வெளி­யா­க­வில்லை. பொலி­ஸார் விசா­ர­ணை­களை தொடர்ந்து முன்­னெ­டுத்­துள்­ள­னர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Police recover kidnapped boy mannar ,Police recover kidnapped boy mannar ,Police recover kidnapped boy mannar ,